ஆஸி.க்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டி : ரோஹித், அஸ்வின் நீக்கம்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியிலிருந்து ரோஹித் சர்மா, அஸ்வின் ஆகியோர் காயம் காரணமாக நீக்கப்பட்டுள்ளனர்.
ஆஸி.க்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டி : ரோஹித், அஸ்வின் நீக்கம்
x
4 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 1க்கு 0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ள நிலையில், 2வது டெஸ்ட் போட்டி நாளை பெர்த் நகரில் தொடங்குகிறது. இந்தப் போட்டிக்காக இரு அணி வீரர்களும் தயாராகி வருகின்றனர். இந்நிலையில், நாளைய போட்டியில் பங்கேற்கும் 13 பேர் கொண்ட பட்டியலை இந்தியா வெளியிட்டுள்ளது. அதில் ரோஹித் சர்மாவுக்கு பதிலாக விஹாரியும், அஸ்வினுக்கு பதிலாக ஜடேஜாவும்  சேர்க்கப்பட்டுள்ளனர். பெர்த் ஆடுகளம் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் புவனேஸ்வர் குமார் உள்ளிட்ட  4 வேகப்பந்துவீச்சாளர்களுடன் இந்தியா களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Next Story

மேலும் செய்திகள்