இந்தியா-மே.இ.தீவுகள் 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி சமனில் முடிந்தது

இந்தியா-மேற்கு இந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான 2 வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி சமனில் முடிந்தது.
இந்தியா-மே.இ.தீவுகள்  2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி சமனில் முடிந்தது
x
* விசாகப்பட்டினத்தில் நடந்த இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்பிற்கு 321 ரன்கள் குவித்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக கேப்டன் விராட் கோலி 157 ரன்களும் அம்பத்தி ராய்டு 73 ரன்களும் எடுத்தனர்.

* இதனையடுத்து பேட்டிங் செய்து விளையாடிய மேற்கு இந்திய தீவுகள் அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்கள் இழப்பிற்கு  321 ரன்கள் அடித்து போட்டியை சமன் செய்தது. 

* கடைசி பந்தில் 5 ரன்கள் தேவை என்ற நிலையில் ஷாய் ஹோப் பவுண்டரி அடித்து இந்தியாவின் வெற்றி கணவை தகர்த்தார். மேற்கு இந்திய தீவுகள் அணியில் அதிகபட்சமாக ஷாய் ஹோப் 123 ரன்களும்,சிம்ரன் ஹெட்மெயர் 94 ரன்களும் எடுத்தனர். 

* இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்