ஒருநாள் தொடரில் சாதிக்குமா மே.இ.தீவுகள் : கவுகாத்தியில் நாளை இந்தியாவுடன் பலப்பரீட்சை

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இழந்த மேற்கிந்தியத் தீவுகள் அணி, ஒருநாள் தொடரில் சாதிக்க வேண்டிய நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளது.
ஒருநாள் தொடரில் சாதிக்குமா மே.இ.தீவுகள் : கவுகாத்தியில் நாளை இந்தியாவுடன் பலப்பரீட்சை
x
இந்தியா,மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி கவுகாத்தியில் ஞாயிற்றுகிழமை அன்று நடைபெறுகிறது. டெஸ்ட் தொடரை இந்திய அணி எளிதில் வென்ற நிலையில், 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை கைப்பற்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி கடுமையாக போராடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால், மேற்கிந்தியத் தீவுகள் அணியில் அதிரடி வீரர் கிறிஸ் கெயில், ரஸில் ஆகியோர் இடம்பெறவில்லை. இந்த நிலையில், அதிரடி வீரர் EWAN LEWIS ம் சொந்த காரணங்களை காட்டி போட்டியிலிருந்து விலகியுள்ளார். இதனால் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.  

இந்திய அணியை பொறுத்தவரை தவான், ரோஹித், கோலி, தோனி என பேட்டிங் வரிசை வலுவாக காணப்படுகிறது. இளம் வீரர் ரிஷப் பந்த் எவ்வாறு செயல்படப்போகிறார் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

மேலும் ஒரு ஆண்டுக்கு பிறகு ஒருநாள் அணியில் இடம்பெற்றுள்ள முகமது ஷமி, இளம் வீரர் கலீல் அகமது ஆகியோரை நம்பியே இந்திய அணியின் வேகப்பந்துவீச்சு உள்ளது.  ஒருநாள் தொடரிலும் இந்தியாவே ஆதிக்கம் செலுத்தும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

Next Story

மேலும் செய்திகள்