ஆசிய விளையாட்டு போட்டி : துப்பாக்கிச் சுடுதல் டிராப் பிரிவில் இந்திய வீரருக்கு வெள்ளி பதக்கம்

ஆடவருக்கான துப்பாக்கிச் சுடுதல் டிராப் பிரிவில் 19 வயதான இந்திய வீரர் லக்சாய் வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினார்.
ஆசிய விளையாட்டு போட்டி : துப்பாக்கிச் சுடுதல் டிராப் பிரிவில் இந்திய வீரருக்கு வெள்ளி பதக்கம்
x
ஆடவருக்கான துப்பாக்கிச் சுடுதல் டிராப் பிரிவில் 19 வயதான இந்திய வீரர் லக்சாய் வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினார். இறுதிப் போட்டியில் 42 புள்ளிகள் குவித்து அவர் 2வது இடத்தை பிடித்தார். இந்தப் பிரிவில் களமிறங்கிய மற்றொரு இந்திய வீரர் மனவ்ஜித் சிங் 4வது இடத்தை பிடித்தார். இதன் மூலம் இந்தியா, ஒரு தங்கம், 2 வெள்ளி, ஒரு வெண்கலப் பதக்கத்தை பெற்றுள்ளது. 

மகளிருக்கான 10 மீட்டர் ஏர் ரைஃபிள் பிரிவு : பதக்கத்தை தவறவிட்ட இந்திய வீராங்கனை



மகளிருக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் துப்பாக்கிச் சுடும்  போட்டி இறுதிச் சுற்றில் இந்திய வீராங்கனை சந்தேலா 5வது இடத்தை மட்டுமே பிடித்தார்.  பதக்கம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 186 புள்ளிகள் மட்டுமே பெற்று 5வது இடத்துடன் நிறைவு செய்தார். 

Next Story

மேலும் செய்திகள்