டி.என்.பி.எல் - இறுதிச் சுற்றுக்கு மதுரை தகுதி

டி.என்.பி.எல். தொடரின் இறுதிச் சுற்றுக்கு கோவையை வீழ்த்தி மதுரை அணி தகுதி பெற்றுள்ளது.
டி.என்.பி.எல் - இறுதிச் சுற்றுக்கு மதுரை தகுதி
x
டி.என்.பி.எல். தொடரின் இறுதிச் சுற்றுக்கு கோவையை வீழ்த்தி மதுரை அணி தகுதி பெற்றுள்ளது. நத்தத்தில் நடைபெற்ற 2வது தகுதிச் சுற்று ஆட்டத்தில் டாஸ் வென்ற கோவை அணி முதலில் பேட் செய்தது. இருபது ஓவர் முடிவில் அந்த அணி 7 விக்கெட் இழப்பிற்கு 125 ரன்கள் மட்டுமே எடுத்தது. 126 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் மதுரை அணி களமிறங்கியது. 

தொடக்க வீரர் அருண் கார்த்திக் 56 பந்துகளில் 79 ரன்கள் விளாச, மதுரை அணி 10 பந்துகள் எஞ்சிய நிலையில் வெற்றி பெற்றது. இதன் மூலம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ள இறுதிப் போட்டியில் திண்டுக்கல் அணியும், மதுரை அணியும் மோத உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்