தூத்துக்குடி அணி திரில் வெற்றி - தோற்றாலும் அரை இறுதிக்குள் நுழைந்த‌து காரைக்குடி

டி.என்.பி.எல். தொடரின் 28 வது லீக் ஆட்டத்தில், தூத்துக்குடி அணி நூலிழையில், அரை இறுதி வாய்ப்பை தவற விட்டது.
தூத்துக்குடி அணி திரில் வெற்றி - தோற்றாலும் அரை இறுதிக்குள் நுழைந்த‌து காரைக்குடி
x
டி.என்.பி.எல். தொடரின் 28 வது லீக் ஆட்டத்தில், தூத்துக்குடி அணி நூலிழையில், அரை இறுதி வாய்ப்பை தவற விட்டது. திருநெல்வேலியில் நடைபெற்ற இந்த போட்டியில், டாஸ் வென்ற தூத்துக்குடி அணி முதலில் பந்து வீச தீர்மானித்த‌து. அதன்படி முதலில் களமிறங்கிய காரைக்குடி அணி, 20 ஓவர்கள் முடிவில், 164 ரன்கள் எடுத்த‌து.  தூத்துக்குடி அணி, ராஜகோபால் சதீஷின் அதிரடி அரை சத‌த்தால், இறுதி ஓவரில் திரில் வெற்றி பெற்றது.  நெட் ரன் ரேட் குறைவாக இருந்த‌தால், 18 புள்ளி 4 ஓவர்களில் இலக்கை அடைந்தால் மட்டுமே அரை இறுதி வாய்ப்பை பெறமுடியும் என்ற நிலையில் இருந்த‌து தூத்துக்குடி அணி. இந்நிலையில்,  கூடுதலாக 4 பந்துகளை எடுத்துகொண்டதால், அரை இறுதி வாய்ப்பை தவற விட்டது தூத்துக்குடி அணி.இதனால் உள்ளூர் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்

Next Story

மேலும் செய்திகள்