உலக கோப்பை கால்பந்து தொடர்: காலிறுதிக்கு முன்னேறியது இங்கிலாந்து அணி

உலக கோப்பை கால்பந்து தொடர்: காலிறுதிக்கு முன்னேறியது இங்கிலாந்து அணி
உலக கோப்பை கால்பந்து தொடர்: காலிறுதிக்கு முன்னேறியது இங்கிலாந்து அணி
x
உலக கோப்பை கால்பந்து தொடர்: காலிறுதிக்கு முன்னேறியது இங்கிலாந்து அணி

உலக கோப்பை பிளேஆப் போட்டியின் பரபரப்பான ஆட்டத்தில் இங்கிலாந்து அணி கொலம்பியாவை வீழ்த்தி வெற்றி பெற்றது.மாஸ்கோவில் நடந்த போட்டியில் 90 நிமிடங்களின் முடிவில் இரு அணிகளும் 1 கோல் அடித்து சமநிலையில் இருந்தது.இதையடுத்து போட்டி கூடுதல் நேரத்திற்கு சென்றது,கூடுதல் நேரத்திலும் இரு அணிகளும் கோல் அடிக்காமல் 1 க்கு 1 என சமநிலையில் இருந்தன.இதனால் வெற்றியாளரை தீர்மானிக்க பெனாலிட்டி ஷூட் முறை நடந்தது.இதில் 3 க்கு 4 என்ற கணக்கில் கொலம்பியா அணியை வீழ்த்தி இங்கிலாந்து அணி காலிறுதிக்கு முன்னேறியது.


உலக கோப்பை கால்பந்து தொடர்: காலிறுதிக்கு முன்னேறியது ஸ்வீடன் அணி

உலக கோப்பை கால்பந்து தொடரின் பிளேஆப் போட்டியில் சுவிட்சர்லாந்து அணியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது ஸ்வீடன். செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்கில் நடைபெற்ற இந்த போட்டியில் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் ஏதும் அடிக்கவில்லை. போட்டியின் 66-வது நிமிடத்தில் போர்ஸ்பெர்க் கோல் அடிக்க 1 க்கு 0 என முன்னிலை பெற்றது ஸ்வீடன். ஆட்ட நேர முடிவு வரை சுவிட்சர்லாந்து அணி கோல் எதுவும் அடிக்காததால் ஸ்வீடன் அணி 1 க்கு 0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியது.

Next Story

மேலும் செய்திகள்