தாய்லாந்தை வீழ்த்திய இந்திய மகளிர் அணி

ஆசிய கோப்பை டி-20 போட்டியில் அபாரம்
தாய்லாந்தை வீழ்த்திய இந்திய மகளிர் அணி
x
மகளிருக்கான ஆசிய கோப்பை இருபது ஓவர் தொடரில் இந்திய அணி 2வது வெற்றியை பதிவு செய்துள்ளது. கோலாலம்பூரில் நடைபெற்ற தாய்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி முதலில் பேட் செய்தது. 20 ஓவர் முடிவில் இந்தியா 4 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக மெஸ்ராம் 32 ரன்கள் எடுத்தார். 133 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தாய்லாந்து அணி 66 ரன்களில் சுருண்டது. 


Next Story

மேலும் செய்திகள்