திடீரென உரையை நிறுத்திய பிரதமர் மோடி - ராகுல் காந்தி கிண்டல்

உலக பொருளாதார கருத்தரங்கில் நேற்று பிரதமர் மோதி உரையாற்றி கொண்டிருந்த போது, இடையில் அவர் பேச்சு தடைபட்டது குறித்து காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.
x
உலக பொருளாதார கருத்தரங்கில் நேற்று பிரதமர் மோதி உரையாற்றி கொண்டிருந்த போது, இடையில் அவர் பேச்சு தடைபட்டது குறித்து காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி பயன்படுத்திய டெலி பிராம்டர் திடீரென அணைந்து விட்டதன் காரணமாக, பிரதமர் திடீரென தனது பேச்சை நிறுத்த நேர்ந்தது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டது. இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள ராகுல் காந்தி, "டெலி பிராம்டரால் கூட இவ்வளவு பெரிய பொய்களை தாங்கிக்கொள்ள முடியவில்லை" என்று கிண்டல் செய்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்