சொத்து விபரம் மறைப்பு - ஓ.பி.எஸ், ரவீந்திரநாத் மீது வழக்குப் பதிவு

வேட்பு மனுவில் உண்மைகளை மறைத்ததாக ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது மகன் ரவீந்திரநாத் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
x
தேனி எம்.பி. ரவீந்திரநாத் மற்றும் எம்.எல்.ஏ.வாக உள்ள முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் வேட்புமனுவில் உண்மையை மறைத்ததாக திமுக நிர்வாகி மிலானி ​​என்பவர் புகாரளித்துள்ளார். அதில், ஓ.பி.எஸ் மற்றும் அவரது மகன் ரவீந்திரநாத் ஆகிய இருவரும், தங்களின் அசையும், அசையா சொத்து, விவசாய நிலம், ஆண்டு வருமானம், கடன் மற்றும் கல்வித்தகுதி உள்ளிட்ட அனைத்தையும் தவறாக கூறியுள்ளதாகவும், அதற்கான ஆவணங்கள் தன்னிடம் உள்ளதாகவும் கூறியுள்ளார். இதை விசாரணைக்கு ஏற்ற தேனி மாவட்ட சிறப்பு நீதிமன்றம், இருவரின் மீதும் வழக்கு தொடர முகாந்திரம் உள்ளதாக கூறியது. மாவட்ட குற்றப்பிரிவுக்கு வழக்கை மாற்றியதுடன், பிப்ரவரி 7ஆம் தேதிக்குள் இறுதி விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும், மிலானிக்கு பாதுகாப்பளிக்கவும் நீதிபதி உத்தரவிட்டார். 


Next Story

மேலும் செய்திகள்