"நாடு முழுவதும் வாரிசு அரசியல் செய்யும் பாஜக" - ஜே.பி.நட்டாவுக்கு ஆர்.எஸ்.பாரதி பதில்

நாடு முழுவதும் வாரிசு அரசியலைச் செய்து வரும் பாஜக, திமுகவைப் பார்த்து, "வாரிசு அரசியல்" என்று கூறுவது, வெட்க கேடானது என்று, நே.பி.நட்டாவுக்கு திமுக அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பதிலடி கொடுத்துள்ளார்.
நாடு முழுவதும் வாரிசு அரசியல் செய்யும் பாஜக - ஜே.பி.நட்டாவுக்கு ஆர்.எஸ்.பாரதி பதில்
x
நாடு முழுவதும் வாரிசு அரசியலைச் செய்து வரும் பாஜக, திமுகவைப் பார்த்து, "வாரிசு அரசியல்" என்று கூறுவது, வெட்க கேடானது என்று, நே.பி.நட்டாவுக்கு திமுக அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பதிலடி கொடுத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக ஊழல் ஆட்சி நடத்துகிறது என்று ஜே.பி.நட்டா குற்றம் சாட்டியதற்கும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

எந்த வழியில் பொய் பிரச்சாரம் செய்தாலும், தமிழ்நாடு மக்கள் தி.மு.க.விற்கு வாக்களித்து ஆட்சியில் அமர வைத்து விட்டார்களே என்ற ஆதங்கத்தில், அபாண்டமாக குற்றச்சாட்டை நட்டா அள்ளி வீசியிருப்பதாக தெரிவித்துள்ளார்.திமுக ஆட்சி இருந்த போதெல்லாம் தமிழ்நாடு எத்தகையை முன்னேற்றம் கண்டது என்பதன் அடையாளம் தான், மக்கள் திமுகவிற்கு வாய்ப்பு அளித்தார்கள் என்பதை உணரவேண்டும் என்று கூறியுள்ளார். தமிழ்நாட்டில் எதை வைத்து அரசியல் செய்வது என்று நட்டாவிற்கு புரியவில்லை என்று கூறியுள்ள ஆர்.எஸ்.பாரதி, அரசியல் விழாக்களுக்கு வரும் போது "பொய் மூட்டைகளை" அவிழ்த்துக் கொட்டுவதை கைவிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்