பெகாசஸ் ஒட்டு கேட்பு விவகாரம் : "பதிவாகும் பேச்சுகள் பிரதமரிடம் சென்றால்,அது ஓரு கிரிமினல் குற்றம்" - ராகுல் காந்தி

பெகாசஸ் ஒட்டுக் கேட்பு விவகாரத்தில் தலைமை தேர்தல் ஆணையம், அதன் ஆணையர் மற்றும் எதிர்கட்சி தலைவர்களின் செல்போன் பேச்சு பதிவுகள் பிரதமரிடம் செல்லும் என்றால், அது ஓரு கிரிமினல் குற்றம் என ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
பெகாசஸ் ஒட்டு கேட்பு விவகாரம் : பதிவாகும் பேச்சுகள் பிரதமரிடம் சென்றால்,அது ஓரு கிரிமினல் குற்றம் - ராகுல் காந்தி
x
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பெகாசஸ் விவகாரம் இந்திய ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் என புகார் கூறியுள்ளார். இந்த விவகாரம் குறித்து உச்சநீதிமன்றம், சிறப்பு நிபுணர் குழு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது வரவேற்கத்தக்கது என்றும், இதன் மூலம் உண்மை நிச்சயம் வெளி வரும் என்ற நம்பிக்கை உள்ளதாக தெரிவித்துள்ளார். பெகாசஸ் விவகாரத்தை விவாதிக்க வேண்டும் என, நாடாளுமன்றத்தில் மீண்டும் கோரிக்கை விடுப்போம் என ராகுல் காந்தி கூறினார். ஆனால் இதற்கு பாஜக தயாராக இருக்காது என்பது நிச்சயமான உண்மை என்றும் ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார். பெகாசஸ் விவகாரம், பல முதலமைச்சர்கள், முன்னாள் பிரதமர்கள் மற்றும் பாஜக அமைச்சர்கள் என்பது உள்ளிட்ட அனைவரிடமும் பயன்படுத்தப்பட்டிருப்பதாக ராகுல்காந்தி குறை கூறியுள்ளார். 
---


Next Story

மேலும் செய்திகள்