தலை தூக்கும் சட்டம் ஒழுங்கு பிரச்சினை - தமிழக அரசுக்கு ஓ.பன்னீர் செல்வம் கோரிக்கை

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை சீரழிக்கும் முயற்சியில் ஈடுபடுவோரை தமிழக அரசு இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
தலை தூக்கும் சட்டம் ஒழுங்கு பிரச்சினை - தமிழக அரசுக்கு ஓ.பன்னீர் செல்வம் கோரிக்கை
x
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை சீரழிக்கும் முயற்சியில் ஈடுபடுவோரை  தமிழக அரசு இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் ஆங்காங்கே கொலை குற்றங்கள் நிகழ்ந்து வருவது மன வேதனையை அளித்து வருகிறது என தெரிவித்துள்ளார்.  சமீபகாலமாக வாணியம்பாடியில் மனித நேய ஜனநாயக கட்சி மாநில செயலாளர் வசீம் அக்ரம் கொலை , திமுக முன்னாள் எம்பியின் பேரன் வெட்டி கொலை , தேவக்கோட்டை பாஜக பிரமுகர் வெட்டிக்கொலை உள்ளிட்ட கொடூர சம்பவங்கள் ஆங்காங்கே நிகழ்ந்து வருவது அதிர்ச்சி அளிப்பதாகவும் ஓ.பன்னீர் செல்வம்  குறிப்பிட்டுள்ளார். இது போன்ற வன்முறை சம்பவங்கள் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியை பாதிக்கும் என்பதால் சட்டம் ஒழுங்கை சீரழிக்கும் முயற்சியில் ஈடுபடுவோரை  தமிழக அரசு இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும் என்று ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தியுள்ளார்.



Next Story

மேலும் செய்திகள்