யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை - ராஜ்யசபா எம்.பி.யாக செல்வகணபதி தேர்வு?

புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ராஜ்யசபா எம்பியாக பா.ஜ.க முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் செல்வகணபதி தேர்வு ஆகிறார்.
x
புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ராஜ்யசபா எம்பியாக பா.ஜ.க முன்னாள்  சட்டமன்ற உறுப்பினர் செல்வகணபதி தேர்வு ஆகிறார்.  

புதுச்சேரியில் ராஜ்யசபா எம்.பி. க்கான தேர்தல் வருகிற 4-ந் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.  தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி சார்பில், வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் செல்வகணபதி, முதலமைச்சர் ரங்கசாமி மற்றும் கூட்டணி கட்சி எம்எல்ஏக்கள் ஆதரவுடன் தனது வேட்பு  மனுவை தேர்தல் நடத்தும் அதிகாரி முனுசாமியிடம் தாக்கல் செய்தார். ராஜ்யசபா எம்.பி பதவிக்கு பிரதான எதிர்கட்சிகளான திமுக, காங்கிரஸ் கட்சிகள் சார்பில் யாரும் மனு தாக்கல் செய்யவில்லை. ஏற்கனவே சுயேட்சையாக 3 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இவர்களுக்கு சட்டமன்ற உறுப்பினர்கள் யாரும் முன்மொழியாததால் தானாகவே அவர்களது வேட்பு மனுக்கள் தள்ளுபடி ஆகிவிடும். இதனால் பாஜக வேட்பாளர் செல்வகணபதி, ராஜ்யசபா எம்.பியாக போட்டியின்றி தேர்வு செய்யப்படும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்