வேட்புமனு தாக்கல் செய்தார் எல்.முருகன் - மாநிலங்களவை பதவிக்கு போட்டி

மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
வேட்புமனு தாக்கல் செய்தார் எல்.முருகன் - மாநிலங்களவை பதவிக்கு போட்டி
x
மத்திய இணை அமைச்சராக பொறுப்பேற்ற எல்.முருகன் மத்திய பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவை தேர்தலுக்கு போட்டியிடுகிறார். இந்த நிலையில் தனது வேட்பு மனுவை போபாலில் எல்.முருகன் தாக்கல் செய்தார். இதில் அம்மாநில  முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சர் பிரஹலா சிங் பட்டேல் உள்ளிட்டோர் உடனிருந்தனர். இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் யாரும் போட்டியிடவில்லை என்பதால், எல்.முருகன் மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்படுவது ஏறத்தாழ உறுதியாகியுள்ளது. நாளை மறுநாள் வேறு யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாமல் இருந்தால்  எல்.முருகன் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படுவார்.




Next Story

மேலும் செய்திகள்