அதிமுக பொதுக்குழு செல்லாது - சசிகலா மனு - விசாரணை ஆகஸ்ட் 4 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

அதிமுக பொதுக்குழு செல்லாது என சசிகலா தாக்கல் செய்த வழக்கின் விசாரணையை சென்னை நகர உரிமையியல் நீதிமன்றம், ஆகஸ்ட் 4 ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளது.
x
சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்ற பிறகு,அதிமுக  பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்குழுக் கூட்டத்தில், சசிகலா மற்றும் தினகரனை பொதுச்செயலாளர், துணைப் பொதுச் செயலாளர் பதவிகளில் இருந்து நீக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த பொதுக்குழு கூட்டத்தை செல்லாது என அறிவிக்கக்கோரி சசிகலா தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு  4வது உதவி உரிமையியல் நீதிமன்ற நீதிபதி  ஸ்ரீதேவி முன்பு விசாரணைக்கு வந்தது. சசிகலா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன், பிரதான வழக்கில் இருந்து தினகரன் விலகியதால், அவரது பெயரை நீக்கி  திருத்த மனு தாக்கல்  செய்தார். இந்த மனு விசாரணைக்கு உகந்தது அல்ல என அதிமுக தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சசிகலா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட திருத்த மனு விசாரணைக்கு உகந்ததுதானா என்பது குறித்த விசாரணையை ஆகஸ்ட் 4ம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்