நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் - பல்வேறு கட்சியினர் பங்கேற்பு

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரை முன்னிட்டு, டெல்லியில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்று வருகிறது.
x
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரை முன்னிட்டு, டெல்லியில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்று வருகிறது. 

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் நாளை தொடங்கி, அடுத்த மாதம் 13-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு மத்திய அரசின் சார்பில், டெல்லியில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடந்து வருகிறது. காலை 11 மணிக்கு தொடங்கிய இந்த கூட்டத்தில், ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, காங்கிரஸ் மக்களவை குழுத் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, திமுக மக்களவை குழுத் தலைவர் டி.ஆர். பாலு, திமுக எம்.பி. திருச்சி சிவா, அதிமுக எம்.பி. நவநீதகிருஷ்ணன் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். அப்போது, எதிர்வரும் நாடாளுமன்றத் தொடரில் கொரோனா பரவல், நீட் தேர்வு உள்ளிட்ட பல்வேறு முக்கிய விவகாரங்களை விவாதிக்க, எதிர்க்கட்சிகள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டதாக தெரிகிறது. மேலும், கூட்டத் தொடரை சுமுகமாக நடத்த மத்திய அரசு வலியுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்