"பிரதமர் கண்ணீரால் உயிரிழப்பை தடுக்க இயலாது" - மத்திய அரசு மீது ராகுல்காந்தி சாடல்

கொரோனாவின் முதல் 2 அலைகளில் மத்திய அரசு முன்னெச்சரிக்கை உடன் செயல்பட்டு இருந்தால் 90 சதவீத உயிரிழப்புகளை தடுத்திருக்க முடியும் என ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
பிரதமர் கண்ணீரால் உயிரிழப்பை தடுக்க இயலாது - மத்திய அரசு மீது ராகுல்காந்தி சாடல்
x
கொரோனாவின் முதல் 2 அலைகளில் மத்திய அரசு முன்னெச்சரிக்கை உடன் செயல்பட்டு இருந்தால் 90 சதவீத உயிரிழப்புகளை தடுத்திருக்க முடியும் என ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். கொரோனா தொடர்பான வெள்ளை அறிக்கையை வெளியிட்டு காணொலி மூலமாக செய்தியாளர்களை காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி சந்தித்தார். அப்போது, மூன்றாவது அலைக்கு பிறகும் மற்றுமொரு அலை ஏற்படும் என கூறப்படுவதையும் சுட்டிக்காட்டினார். முதல் மற்றும் இரண்டாவது அலையில் தோல்வி அடைந்தது போல் அல்லாமல், மத்திய அரசு மூன்றாவது அலையை எதிர்க்கொள்ள வேண்டும் எனவும்,  தவறுகளை அரசு திருத்திக் கொள்ளவே வெள்ளை அறிக்கை வெளியிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மூன்றாவது அலை நிச்சயம் என்ற நிலையில்,அதை எதிர்கொள்ள தேவையான மருந்துகள், ஆக்சிஜன் படுக்கைகள், மருத்துவமனைகள் போன்றவற்றை தயார் செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். முதல் மற்றும் இரண்டாவது அலையில் செய்த தவறுகளை அரசு மீண்டும் செய்து விடக்கூடாது என வலியுறுத்தி உள்ளார். 
நேற்று அதிக அளவில் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளதை பாராட்டியுள்ள ராகுல்காந்தி, இது அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் வரை தொடர வேண்டும் என கேட்டுக் கொண்டார். 
உரிய நேரத்தில் ஆக்ஸிஜன் கிடைக்கும் நிலை இருந்திருந்தால், நாட்டில்  90 சதவீத உயிரிழப்புகளை தவிர்த்திருக்கலாம்  என்றும்,பிரதமரின்  கண்ணீர் உயிர்களை காப்பாற்றாது எனவும் ராகுல்காந்தி சாடியுள்ளார். 
கொரோனா உயிரிழப்புகள், அரசின் அதிகாரப்பூர்வ புள்ளி விவரங்களை காட்டிலும் 5-6 மடங்கு அதிகம் எனவும், 
எனினும் இது அரசியல் செய்வதற்குரிய நேரமில்லை என்றும், தடுப்பூசி அதிக அளவில் செலுத்த மத்திய அரசு கவனம் செலுத்த வேண்டும் எனவும் ராகுல்காந்தி கேட்டுக் கொண்டுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்