புதுச்சேரி அரசியலில் நீடிக்கும் குழப்பம்: 3 அமைச்சர்களை கோரும் பாஜக - கோரிக்கையை மறுக்கும் என்.ஆர்.காங்.?

புதுச்சேரி அமைச்சரவை பதவியேற்பதில் இழுபறி நீடிக்கும் நிலையில், பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவை, புதுச்சேரி பாஜக சட்டமன்றக் குழுத் தலைவர் நமச்சிவாயம் சந்தித்துப் பேசினார்.
புதுச்சேரி அரசியலில் நீடிக்கும் குழப்பம்: 3 அமைச்சர்களை கோரும் பாஜக - கோரிக்கையை மறுக்கும் என்.ஆர்.காங்.?
x
புதுச்சேரி  சட்டமன்றத் தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ்-பாஜக கூட்டணி, வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. தொடர்ந்து, கடந்த 7-ம் தேதி முதலமைச்சராக ரங்கசாமி பதவியேற்றுக் கொண்டார். இதனையடுத்து, துணை முதல்வர் மற்றும் 3 அமைச்சர் பதவிகளை ஒதுக்குமாறு என்.ஆர். காங்கிரசிடம் பாஜக வலியுறுத்தியது. இதனை என்.ஆர். காங்கிரஸ் மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால், அமைச்சரவை பதவியேற்பதில் இழுபறி ஏற்பட்டது. இந்நிலையில், டெல்லி சென்ற, புதுச்சேரி பாஜக சட்டமன்றக் குழுத் தலைவர் நமச்சிவாயம், பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவை சந்தித்தார். அப்போது, அமைச்சரவை விவகாரம் தொடர்பாக அவர் ஜே.பி. நட்டாவுடன் பேசி உள்ளார். மேலும், என்.ஆர். காங்கிரஸிடம் 3 அமைச்சர் பதவிகளை வழங்க வலியுறுத்துமாறு ஜே.பி. நட்டாவிடம் அவர் கேட்டுக் கொண்டு உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்