கொரோனா தடுப்பு நடவடிக்கை - அனைத்துக்கட்சி எம்.எல்.ஏ.க்கள் கொண்ட குழு அமைப்பு

கொரோனா தொற்றை பரவலாக கட்டுப்படுத்த, மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், 13 கட்சி எம்.எல்.ஏ.க்கள் கொண்ட ஆலோசனை குழு அமைக்கப்பட்டுள்ளது.
x
கொரோனா தொற்றை பரவலாக கட்டுப்படுத்த, மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், 13 கட்சி எம்.எல்.ஏ.க்கள் கொண்ட ஆலோசனை குழு அமைக்கப்பட்டுள்ளது. 

இது குறித்து தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், கடந்த 13 ஆம் தேதி நடத்தப்பட்ட அனைத்து சட்டமன்ற கட்சி தலைவர்கள்  கூட்டத்தில் பெறப்பட்ட பரிந்துரையின் படி, ஆலோசனை குழு அமைக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது. இந்த குழுவில், திமுக தரப்பில் நா.எழிலன், அதிமுக சார்பில் சி.விஜயபாஸ்கர், காங்கிரஸ் கட்சி சார்பில் முனிரத்தினம், பாமக சார்பில் ல் ஜி.கே.மணி உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதே போல் பாஜகவின் நயினார் நாகேந்திரன், மதிமுகவின் சதன் திருமலைக்குமார், விசிகவை சேர்ந்த எஸ்.எஸ்.பாலாஜி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வி.பி.நாகை மாலி, இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் தி.ராமச்சந்திரன் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். மனிதநேய மக்கள் கட்சியின் ஜவாஹிருல்லா, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் ரா.ஈஸ்வரன், தமிழக வாழ்வுரிமை கட்சியின் தி.வேல்முருகன், மற்றும் புரட்சி பாரதம் கட்சியின் பூவை ஜெகன் மூர்த்தி ஆகியோரும், ஆலோசனை குழு உறுப்பினர்கள் ஆக நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த ஆலோசனை குழு அவசர அவசியம் கருதி நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து ஆலோசனைகள் பெற அவ்வப்போது கூடி விவாதிக்கும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்த குழுவிற்கு, பொதுத்துறை செயலாளர் உறுப்பினர் செயலராக செயல்படுவார் என்றும் தமிழக அரசு விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்