உலகிலேயே மிகப்பெரிய தடுப்பூசி திட்டம்; மருத்துவ கட்டமைப்பை மேம்படுத்த முன்னுரிமை - ஜே.பி. நட்டா

உலகத்திலேயே மிகப் பெரிய தடுப்பூசி திட்டத்தை நமது நாடு செயல்படுத்தி வருகிறது என சோனியா காந்திக்கு பாஜக தலைவர் ஜே.பி. நட்டா பதிலளித்து உள்ளார்.
உலகிலேயே மிகப்பெரிய தடுப்பூசி திட்டம்; மருத்துவ கட்டமைப்பை மேம்படுத்த முன்னுரிமை - ஜே.பி. நட்டா
x
உலகத்திலேயே மிகப் பெரிய தடுப்பூசி திட்டத்தை நமது நாடு செயல்படுத்தி வருகிறது என சோனியா காந்திக்கு பாஜக தலைவர் ஜே.பி. நட்டா பதிலளித்து உள்ளார். மத்திய அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டத்தில், அக்கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி விமர்சனங்களை முன்வைத்தார். இதற்கு விளக்கம் அளித்து கடிதம் எழுதியுள்ள பாஜக தலைவர் ஜே.பி. நட்டா, நமது நாட்டில் செயல்படுத்தப்படும் தடுப்பூசி திட்டம் உலக நாடுகளில் சிறந்த முன்மாதிரியை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது என தெரிவித்து உள்ளார். ஜனவரி மாதமே மருத்துவ முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி போடும் பணியை தொடங்கிவிட்டோம் என்றும் நமது நாட்டில் இளைஞர்களுக்கு தடுப்பூசி போடப்படுவதை போன்று மேற்கத்திய நாடுகளில் இதுவரையில் போடப்படவில்லை என்றும் கூறியுள்ளார். மேலும் மோடி அரசு நாட்டில் மருத்துவ கட்டமைப்பை மேம்படுத்த முன்னுரிமை அளித்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்