"அப்பாவிகள் உயிரிழப்பை தடுக்க வேண்டும்" - ஸ்டாலினுக்கு ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள்

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் நிகழ்ந்தது போன்ற துயர சம்பவங்கள் இனிவரும் காலத்தில் நிகழாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, முதலமைச்சராக பதவியேற்கவுள்ள ஸ்டாலினுக்கு, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அப்பாவிகள் உயிரிழப்பை தடுக்க வேண்டும் - ஸ்டாலினுக்கு ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள்
x
செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் நிகழ்ந்தது போன்ற துயர சம்பவங்கள் இனிவரும் காலத்தில் நிகழாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, முதலமைச்சராக பதவியேற்கவுள்ள ஸ்டாலினுக்கு, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 13 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும், துயரத்தையும் அளிப்பதாக கூறியுள்ளார். கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் நிலையில், போதிய மருந்து, தடுப்பூசி, ஆக்சிஜன் ஆகியவற்றை இருப்பு வைத்து கொள்வதை அரசு உறுதி செய்து, அப்பாவி மக்கள் உயிரிழப்பதை தடுக்க வேண்டும் என்றும் பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்