பாஜக அலுவலகங்களில் திரிணாமுல் காங்கிரசார் தாக்குதல் - பாஜக தொண்டர்கள் உயிரிழப்பு

மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரசார் வன்முறையை கட்டவிழ்த்துவிட்டுள்ளதாக குற்றம் சாட்டியிருக்கும் பாஜக நாளை நாடு தழுவிய தர்ணா போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.
பாஜக அலுவலகங்களில் திரிணாமுல் காங்கிரசார் தாக்குதல் - பாஜக தொண்டர்கள் உயிரிழப்பு
x
மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரசார் வன்முறையை கட்டவிழ்த்துவிட்டுள்ளதாக குற்றம் சாட்டியிருக்கும் பாஜக நாளை நாடு தழுவிய தர்ணா போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.மேற்கு வங்கத்தில் தேர்தல் முடிவுகள் வெளியானதை அடுத்து ஆங்காங்கே பாஜக அலுவலகங்கள் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர்தான் இந்த வன்முறையில் ஈடுபட்டுள்ளதாக பாஜக தரப்பில் குற்றம் சாட்டப்படுகிறது. ஆனால் இதனை மற்றும் திரிணாமுல் காங்கிரஸ், பாஜக உள்கட்சியினரே இந்த செயலில் ஈடுபடுகிறார்கள் எனக் குற்றம் சாட்டுகிறது.  இதற்கிடையே தேர்தல் முடிவு வெளியான பின்னர் 6 பாஜக தொண்டர்கள் கொல்லப்பட்டுள்ளதாக மாநில பாஜக குற்றம் சாட்டியுள்ளது. இந்நிலையில் திரிணாமுல் காங்கிரசுக்கு எதிராக நாளை நாடு தழுவிய தர்ணா போராட்டம் நடைபெறும் என பாஜக கூறியுள்ளது. மேலும், வன்முறை சம்பவங்கள் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகமும், மாநில அரசிடம் அறிக்கையை கோரியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்