கேரளாவில் மார்க்சிஸ்ட் கட்சி வகுத்த வியூகங்கள் - சந்தித்த சவால்கள்

கேரளாவில் ஆட்சியை தக்கவைக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வகுத்த வியூகங்கள், சந்தித்த சவால்களை பார்க்கலாம்...
கேரளாவில் மார்க்சிஸ்ட் கட்சி வகுத்த வியூகங்கள் - சந்தித்த சவால்கள்
x
இந்தியாவிலேயே படிப்பறிவு அதிக உள்ள மாநிலமான கேரளாவில் 5 ஆண்டுக்கு ஒருமுறை ஆட்சி மாற்றம் என்பது நிச்சயிக்கப்பட்ட ஒன்றாக இருந்து வருகிறது. கடந்த 2016ஆம் ஆண்டு தேர்தலில் பிரதான கட்சிகளான மார்க்சிஸ்ட், இடதுசாரி, மதச்சர்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய இடது ஜனநாயக முன்னணியும், காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மாணி தலைமையிலான கேரள காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய ஐக்கிய ஜனநாயக முன்னணியும் போட்டியிட்டன. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியும் மூன்றாவது அணியாக களத்தில் இருந்தது. இதில் 91 இடங்களில் வெற்றி பெற்ற இடது ஜனநாயக முன்னணியில் மார்க்சிஸ்ட் 58 இடங்களை பிடித்ததன் மூலம் பினராயி விஜயன் முதலமைச்சராக பொறுப்பேற்றார்.தனது ஆட்சி காலத்தில் எளிமையான, அதேநேரம் துடிப்பான நிா்வாகத்தால் பெயர் எடுத்த பினராயி விஜயனுக்கு, சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் விவகாரம் பெரும் சிக்கலை ஏற்படுத்தியது. உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதால், அதனை செயல்படுத்த அரசு பெரும் முயற்சி மேற்கொண்டது. இது பினராயி அரசுக்கு சற்று சறுக்கலை ஏற்படுத்தியது. அதேநேரம் சபரிமலையில் பெண்களை அனுமதிக்கக்கூடாது என்பதை அரசியல் அஸ்திரமாக பாஜக பயன்படுத்திக் கொண்டது. மாநிலம் முழுவதும் போராட்டங்களை தீவிரப்படுத்தியது. ஆனால், இது பாஜகவுக்கு எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தியதால், அப்போது நடந்த உள்ளாட்சி தேர்தலில் பாஜக படுதோல்வியை சந்தித்தது. இதிலிருந்து உஷாரான பினராயி அரசு, சபரிமலை விஷயத்தில் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு, மத்திய பாஜக அரசுக்கு எதிராக கடும் விமர்சனங்களை முன்வைத்தது. கேரளாவில் நடிகை கடத்தப்பட்டு, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் பிரபல நடிகர் திலீப் மீது பினராயி அரசு துணிந்து நடவடிக்கை எடுத்தது. நடிகர் திலீப்பை கைது செய்ததுடன், வழக்கு  விசாரணையும் துரிதப்படுத்தியது. இது பினராயி ஆட்சி மீது மக்கள் மத்தியில் நன்மதிப்பை பெற்றுத்தந்தது. இந்நிலையில் ஆட்சியின் கடைசி கட்டத்தில் தங்க கடத்தல் வழக்கு பெரும் தலைவலியை உண்டாக்கியது. இந்த வழக்கை விசாரித்த என்ஐஏ, கேரள ஐ.ஏ.எஸ். அதிகாரி சிவசங்கரன் உள்ளிட்டோரை கைது செய்த நிலையில், ஆட்சி மீது களங்கம் கற்பிக்கப்பட்டது. ஆனால் வழக்கு விசாரணையில் பல்வேறு திருப்பங்கள் ஏற்பட்டதால், இது பினராயி அரசுக்கு ஆதரவான போக்கையே ஏற்படுத்தியது. தேசிய அளவில் பிரதான கட்சிகளாக விளங்கும் பாஜக மற்றும் காங்கிரசை வீழ்த்தி ஆட்சியை தொடர மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பெரும் வியூகங்களை வகுத்து செயல்பட்டது. 








Next Story

மேலும் செய்திகள்