கேரளாவில் மீண்டும் இடதுசாரிகள் ஆட்சி - 40 ஆண்டு டிரெண்டை முறியடித்த பினராயி

கேரளாவில் இடதுசாரி கூட்டணி அபார வெற்றியை பதிவு செய்து ஆட்சியை தக்கவைத்துள்ளது.
கேரளாவில் மீண்டும் இடதுசாரிகள் ஆட்சி - 40 ஆண்டு டிரெண்டை முறியடித்த பினராயி
x
கேரளாவில் மொத்தமுள்ள 140 தொகுதிகளுக்கான தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற்றது. ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையில் இடதுசாரிகள், காங்கிரஸ், பாஜக என மும்முனை போட்டி நிலவியது. வாக்கு எண்ணிக்கை நேற்று தொடங்கிய போது, இடதுசாரிகளுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் போட்டி நிலவினாலும், சில நிமிடங்களில் இடதுசாரி கூட்டணி முன்னிலை பெற்றது. தர்மாடம் தொகுதியில் போட்டியிட்ட முதலமைச்சர் பினராயி விஜயன் 50,123 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இறுதியில் 99 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்தது. கேரளாவில் 40 ஆண்டுகளுக்கு மேலாக காங்கிரசும், இடதுசாரிகளும் மாறி மாறி ஆட்சி அமைத்து வந்த நிலையில், முதன்முறையாக ஆட்சியை தக்க வைத்து இடதுசாரிகள் சாதனை படைத்துள்ளது. காங்கிரஸ் கூட்டணி 41 தொகுதிகளில் வெற்றி பெற்ற நிலையில், பாஜக கூட்டணியால் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியவில்லை. 


Next Story

மேலும் செய்திகள்