'இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்' என்ற திருக்குறளை சுட்டிக்காட்டி பிரதமர் மோடிஆட்சியை விமர்சித்த ப.சிதம்பரம்

ஏழு ஆண்டுகளில் பிரதமர் மோடி நாட்டுக்காக முன்னெடுத்த நடவடிக்கை அனைத்தும் தவறாகவே முடிந்துள்ளதாக முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் என்ற திருக்குறளை சுட்டிக்காட்டி பிரதமர் மோடிஆட்சியை விமர்சித்த ப.சிதம்பரம்
x
ஏழு ஆண்டுகளில் பிரதமர் மோடி நாட்டுக்காக முன்னெடுத்த நடவடிக்கை அனைத்தும் தவறாகவே முடிந்துள்ளதாக முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், அதிகரித்துள்ள பணவீக்கம், தொழில்துறை வீழ்ச்சி, பங்குச்சந்தை வீழ்ச்சி இவையுடன் சேர்ந்து பிரதமர் மோடியின் 7 ஆண்டு ஆட்சி நிறைவடைய உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இது மட்டும் இல்லாமல் வரி விதிப்பு முறைகளை சிதைத்தும், வேலை வாய்ப்பின்மையை அதிகரிக்கச் செய்தும், மக்களை வறுமைக்கு கொண்டு சென்றுள்ளதாக விமர்சித்துள்ளார். இவை அனைத்தும் பணமதிப்பிழப்பு நடவடிக்கையில் இருந்து தொடங்கிய நிர்வாக சீர்கேடு என்றும் குற்றம்சாட்டியுள்ளார். மேலும் இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் என்ற திருக்குறளை சுட்டிக்காட்டி பிரதமர் மோடி ஆட்சியை ப.சிதம்பரம் கடுமையாக விமர்சித்துள்ளார். 



Next Story

மேலும் செய்திகள்