கொல்கத்தாவில் பிரதமர் மோடி பிரசாரம்

மேற்கு வங்க மக்களின் நம்பிக்கையை மம்தா பானர்ஜி சிதைத்து விட்டார் என ​பிரதமர் நரேந்திர மோடி, குற்றஞ்சாட்டியுள்ளார்.
கொல்கத்தாவில் பிரதமர் மோடி பிரசாரம்
x
மேற்கு வங்க மக்களின் நம்பிக்கையை மம்தா பானர்ஜி சிதைத்து விட்டார் என ​பிரதமர் நரேந்திர மோடி, குற்றஞ்சாட்டியுள்ளார்.


மேற்கு வங்க மாநிலம் சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, கொல்கத்தாவில் உள்ள பிரிகேடு மைதானத்தில், நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார்.அப்போது பேசிய பிரதமர் மோடி,  மாற்றத்தை கொண்டு வருவார் என மேற்கு வங்க அரசின் மீது மக்கள் நம்பிக்கை வைத்ததாக குறிப்பிட்டார். ஆனால், அந்த நம்பிக்கையை, மம்தா பானர்ஜி தகர்த்து எறிந்து விட்டதாக பிரதமர் மோடி புகார் கூறினார்.மேற்கு வங்கத்திற்கு மம்தா பானர்ஜி அரசு, அவமானத்தை ஏற்படுத்தி விட்டதாகவும், பிரதமர் மோடி குறை கூறினார். மேற்கு வங்க விவசாயிகளின் முன்னேற்றம், சுயதொழில் முனைவோர்,  சகோதரிகள், மகள்கள் மற்றும் இளைஞர்களுக்காக 24 மணி நேரமும் பணியாற்றுவோம் என்றும் பிரதமர் மோடி வலியுறுத்தினார். ஒவ்வொரு நொடியும் வங்காள மக்களுக்காகவே வாழ்வோம், என்றும், பிரதமர் மோடி தெரிவித்தார். மம்தா பானர்ஜி நந்திகிராமில் போட்டியிடுவதை சுட்டிக்காட்டிய பிரதமர் மோடி, ஸ்கூட்டி இங்கு கவிழ வேண்டும் என்றால் என்ன செய்ய முடியும் என கிண்டலுடன் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்