"இடஒதுக்கீடு : ராமதாஸ் ஏமாந்து விட்டார்" - த.வா.க தலைவர் வேல்முருகன் குற்றச்சாட்டு

உள் இட ஒதுக்கீட்டால் வன்னியர்களின் வேலைவாய்ப்பு குறைந்து விட்டதாக, தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் குற்றம்சாட்டி உள்ளார்.
இடஒதுக்கீடு : ராமதாஸ் ஏமாந்து விட்டார் - த.வா.க தலைவர் வேல்முருகன் குற்றச்சாட்டு
x
உள் இட ஒதுக்கீட்டால் வன்னியர்களின் வேலைவாய்ப்பு குறைந்து விட்டதாக, தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் குற்றம்சாட்டி உள்ளார். ஓமலூரில் நடைபெற்ற மாநாட்டில் பேசிய அவர், மிகவும் பிற்பட்டோர் பிரிவில் வன்னியர் சமூகத்தினர் 14 சதவீதம் வேலைவாய்ப்பு பெற்று வந்த நிலையில், உள் இடஒதுக்கீட்டின் காரணமாக 10 புள்ளி 5 சதவீதமாக குறைந்து விட்டதாக தெரிவித்தார். 40 வருடமாக அரசியலில் இருக்கும் பாமக நிறுவனர் ராமதாஸ், இடஒதுக்கீடு  விஷயத்தில் ஏமாந்து விட்டதாகவும், அவர் குறிப்பிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்