காங்கிரஸ் பலவீனமடைந்துள்ளது என்பதுதான் நிதர்சனம் - கபில் சிபல் கருத்து

காங்கிரஸ் கட்சி பலவீனமடைந்துள்ளது என்பது தான் நிதர்சனம் என, அக்கட்சியின் மூத்த தலைவர் கபில் சிபல் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் பலவீனமடைந்துள்ளது என்பதுதான் நிதர்சனம் -  கபில் சிபல் கருத்து
x
காங்கிரஸ் கட்சி பலவீனமடைந்துள்ளது என்பது தான் நிதர்சனம் என, அக்கட்சியின் மூத்த தலைவர் கபில் சிபல் தெரிவித்துள்ளார். 

ஜம்மு காஷ்மீரில் 'சாந்தி சம்மலன்' என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஆனந்த் சர்மா, முன்னாள் ஹரியானா முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடா, கபில் சிபல் மற்றும் குலாம் நபி ஆசாத் ஆகியோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் பேசிய கபில் சிபல், காங்கிரஸ் கட்சியில்  உள்கட்சி பூசல் தொடருவதாக கூறினார். இதனால், கட்சி பலவீனம் அடைந்து உள்ளது என்பது,
நிதர்சனமான உண்மை என்று கூறினார். இதனால், கட்சியை பலப்படுத்த வேண்டும் என்றும் கபில்சிபல் வலியுறுத்தினார். குலாம் நபி ஆசாத் ஒவ்வொரு மாநிலத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் காங்கிரஸின் கட்சியை எதார்த்த சூழ்நிலையை அறிந்தவர் என்று கூறினார். அவர் நாடாளுமன்றத்திலிருந்து விடுவிக்கப்படுகிறார் என்பதைக் கேட்டு வருத்தம் அடைந்ததாகவும் கபில் சிபல் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்