தூத்துக்குடியில் 2ம் கட்ட பிரசாரம் தொடக்கம் - தென் மாவட்டங்களில் பிரசாரம் செய்யும் ராகுல்

தமிழகத்தில் இரண்டாம் கட்ட தேர்தல் பிரசாரத்துக்காக தூத்துக்குடி வந்துள்ளார் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி.
தூத்துக்குடியில் 2ம் கட்ட பிரசாரம் தொடக்கம் - தென் மாவட்டங்களில் பிரசாரம் செய்யும் ராகுல்
x
கடந்த முறை தமிழகம் வந்த ராகுல் காந்தி, கோவை, ஈரோடு, திருப்பூர், கரூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். இதையடுத்து, இரண்டாவது கட்டமாக தூத்துக்குடியில் ராகுல் காந்தி பிரசாரத்தை தொடங்கியுள்ளார். 3 நாள் பயணமாக தமிழகம் வந்துள்ள அவர், தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, குமரி ஆகிய மாவட்டங்களில் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். தூத்துக்குடி விமான நிலையம் வந்த ராகுல் காந்திக்கு, காங்கிரஸ் கட்சி சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து, தூத்துக்குடி வ.உ.சி கல்லூரியில் நடைபெற்ற மாவட்ட வழக்கறிஞர்கள் உடனான கலந்துரையாடலில் அவர் கலந்து கொண்டார். இதையடுத்து, பல்வேறு இடங்களில் நடைபெற உள்ள பிரசார நிகழ்ச்சிகளில் ராகுல் காந்தி பங்கேற்க உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்