பா.ஜ.க.வை கண்டித்து நாளை கண்டன ஆர்ப்பாட்டம் - திருமாவளவன் அறிவிப்பு

புதுச்சேரியில் காங்கிரஸ் அரசைக் கவிழ்த்தி பா.ஜ.க. அரசு ஜனநாயக படுகொலையை செய்துள்ளது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
பா.ஜ.க.வை கண்டித்து நாளை கண்டன ஆர்ப்பாட்டம் - திருமாவளவன் அறிவிப்பு
x
 சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அகில இந்திய இதர பிற்படுத்தப்பட்ட ஊழியர்கள் நலச் சங்கங்களின் பேரமைப்பு சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், 
பா.ஜ.க. நடவடிக்கையை  கண்டித்து நாளை புதுச்சேரியில் தமது தலைமையில் மாபெரும் கண்டன  ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்