முல்லைப் பெரியாறு அணை தண்ணீர், குழாய் மூலம் கொண்டு வரும் திட்டம் - "ஒரு வாரத்தில் அரசாணை வெளியீடு"

முல்லைப் பெரியாறு அணையில் இருந்து ஆண்டிப்பட்டி பகுதிக்கு குழாய் மூலமாக தண்ணீர் கொண்டு வரும் திட்டத்திற்கு விரைவில் அரசாணை வெளியிடப்படும் என்று துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்
முல்லைப் பெரியாறு அணை தண்ணீர், குழாய் மூலம் கொண்டு வரும் திட்டம் - ஒரு வாரத்தில் அரசாணை வெளியீடு
x
தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், ஆயிரத்து 223  பயனாளிகளுக்கு  4 கோடியே 15 லட்சம் மதிப்பிலான  நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது பேசிய துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் முல்லைப்பெரியாறு அணையில் இருந்து குழாய் மூலமாக ஆண்டிபட்டி ஒன்றிய பகுதிகளுக்கு தண்ணீர் கொண்டு வரும் திட்டத்தை நிறைவேற்ற விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்ததாக குறிப்பிட்டார். இதை ஏற்று வரும் வாரத்திற்குள் 180 கோடி  மதிப்பிலான அத்திட்டத்திற்கான அரசாணை வெளியிடப்படும் என்று துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்