சர்ச்சைக்குரிய டூல்கிட் விவகாரம் - மேலும் 2 ஆர்வலர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
விவசாயிகள் போராட்ட விவகாரத்தில் சர்ச்சைக்குரிய டூல்கிட்டை உருவாக்கிய மேலும் இரண்டு ஆர்வலர்களை டெல்லி போலீசார் தேடி வருகின்றனர்.
விவசாயிகள் போராட்ட விவகாரத்தில் சர்ச்சைக்குரிய டூல்கிட்டை உருவாக்கிய மேலும் இரண்டு ஆர்வலர்களை டெல்லி போலீசார் தேடி வருகின்றனர்.
சர்ச்சைக்குரிய டூல்கிட் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்துவரும் டெல்லி போலீசார், பெங்களூரை சேர்ந்த சுற்றுசூழல் செயற்பாட்டாளர் திஷா ரவியை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இதற்கிடையே டூல்கிட் தயாரிப்பில் தொடர்புடையவர்கள் எனக் கூறி மும்பையை சேர்ந்த ஆர்வலர்கள் நிகிதா ஜேக்கப், சாந்தனுவுக்கு டெல்லி போலீஸ் ஜாமீனில் விட முடியாத வாரண்டு பிறப்பித்துள்ளது. இருவரையும் பிடிக்க மும்பை உள்ளிட்ட நகரங்களில் டெல்லி போலீசார் தேடுதல் வேட்டை நடத்தி வருகிறார்கள். அவர்கள் தலைமறைவாகிவிட்டனர் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே அவர்கள் இருவர் தரப்பிலும் மும்பை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.
Next Story