அடுத்தடுத்து ராஜினாமா செய்யும் எம்எல்ஏக்கள் - முதல்வர் நாராயணசாமி ஆட்சிக்கு நெருக்கடி

புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் கட்சியில் இருந்து 3 எம்எல்ஏக்கள் ஏற்கனவே ராஜினாமா செய்த நிலையில் இன்று மேலும் ஒரு எம்எல்ஏ தனது பதிவியை ராஜினாமா செய்துள்ளார்.
x
புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் கட்சியில் இருந்து 3 எம்எல்ஏக்கள் ஏற்கனவே ராஜினாமா செய்த நிலையில் இன்று மேலும் ஒரு எம்எல்ஏ தனது பதிவியை ராஜினாமா செய்துள்ளார். 

புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சியில் அதிருப்தியில் இருந்த முன்னாள் அமைச்சர் நமச்சிவாயமும், எம்எல்ஏ தனவேலுவும் கடந்த மாதம் தங்களது சட்டமன்ற உறுப்பினர் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு பாஜகவில் இணைந்தனர். இதனிடையே அமைச்சர் பதவியை மட்டும் ராஜினாமா செய்த மல்லாடி கிருஷ்ணா ராவ் நேற்று தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதற்கான கடிதத்தை சபாநாயகருக்கு அனுப்பினார். இதேபோல் இன்றும் ஒரு எம்எல்ஏ தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். காமராஜ் நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரான ஜான்குமார் சபாநாயகரை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்துள்ளார்.காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி நாளை புதுச்சேரி வரவுள்ள நிலையில் கடந்த 2 நாட்களில் மட்டும் 2 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story

மேலும் செய்திகள்