தேமுதிக கொடி நாள் நிகழ்ச்சி : கட்சி கொடியை ஏற்றிய விஜயகாந்த்

தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் தமிழகம் முழுவதும் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளதாக பிரேமலதா அறிவித்துள்ளார்.
தேமுதிக கொடி நாள் நிகழ்ச்சி : கட்சி கொடியை ஏற்றிய விஜயகாந்த்
x
தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் தமிழகம் முழுவதும் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளதாக பிரேமலதா அறிவித்துள்ளார். தேமுதிக சார்பில் ஆண்டுதோறும் பிப்ரவரி 12 ஆம் தேதி அக்கட்சியின் கொடி நாள் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இதற்காக கோயம்பேட்டில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டிருந்த 118 அடி உயர கொடிக் கம்பத்தில் விஜயகாந்த் கட்சிக் கொடியை ஏற்றினார். பின்னர் விஜயகாந்த்தும், பிரேமலதாவும் அங்கிருந்த தொண்டர்களுக்கு கொடிநாள் வாழ்த்தை தெரிவித்துக்கொண்டனர்.


Next Story

மேலும் செய்திகள்