சீனாவுக்கு பயப்படுகிறார் பிரதமர்...இந்திய பகுதிகளை சீனாவுக்கு கொடுத்துவிட்டார் - ராகுல்காந்தி

பிரதமர் மோடி, ராணுவ வீரர்களின் தியாகத்திற்கு எதிராக செயல்படுவதாக காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
சீனாவுக்கு பயப்படுகிறார் பிரதமர்...இந்திய பகுதிகளை சீனாவுக்கு கொடுத்துவிட்டார்  - ராகுல்காந்தி
x
பிரதமர் மோடி, ராணுவ வீரர்களின் தியாகத்திற்கு எதிராக செயல்படுவதாக காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்திய எல்லை பகுதிகளில் சீனா ஊடுருவி உள்ளது என்றும்இந்திய பகுதிகளை பிரதமர் சீனாவிற்கு விட்டுக் கொடுத்து விட்டார் எனவும் குற்றம் சாட்டினார்,.இந்திய படைகள் கைப்பற்றிய பகுதிகளை பிரதமர் மோடி சீனாவிற்கு திரும்ப கொடுத்துவிட்டார் எனவும் சீனாவிற்கு ஆதரவாக இருந்து இந்திய ராணுவ வீரர்களை பிரதமர் அவமதிக்கிறார் எனவும் ராகுல்காந்தி தெரிவித்தார்,. இந்திய பகுதிகளை சீனாவிற்கு விட்டுக்கொடுத்தது குறித்து பிரதமர் பதிலளிக்க வேண்டும் எனவும் சீனா ஊடுருவிய பகுதிகள் குறித்து, ராஜ்நாத் சிங் இதுவரை ஒரு வார்த்தை கூட பேசவில்லை எனவும் ராகுல் காந்தி கூறினார்,.  இந்த நாட்டின் பிரதேசத்தை பாதுகாப்பது பிரதமரின் பொறுப்பு என்பதை மறந்து சீனாவை பார்த்து மோடி பயப்படுவதாக குற்றம் சாட்டிய  ராகுல்காந்தி இந்திய படைகளை வேறு இடத்திற்கு கொண்டு செல்வதற்கான காரணம் என்ன என்று கேள்வி எழுப்பினார்,. 


Next Story

மேலும் செய்திகள்