காவிரி - குண்டாறு திட்டம் திமுக தொடங்கியது - பிரதமரை ஏமாற்ற பார்க்கிறது தமிழக அரசு"

பிரதமர் தொடங்கி வைக்க உள்ள காவிரி - குண்டாறு திட்டம் திமுக ஆட்சியிலேயே தொடங்கப்பட்டது என்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
காவிரி - குண்டாறு திட்டம் திமுக தொடங்கியது - பிரதமரை ஏமாற்ற பார்க்கிறது தமிழக அரசு
x
பிரதமர் தொடங்கி வைக்க உள்ள காவிரி - குண்டாறு திட்டம் திமுக ஆட்சியிலேயே தொடங்கப்பட்டது என்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காவிரி - குண்டாறு திட்டம்  திமுக ஆட்சியில், 2009 ஆம் ஆண்டிலேயே தொடங்கப்பட்டு, நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த திட்டம் என தெரிவிக்கப்பட்டுள்ளது,.நீண்ட நெடிய வரலாறு படைத்த திட்டங்களில் ஒன்றான காவேரி - குண்டாறு திட்டத்தை, 'வருகின்ற 14ஆம் தேதி பிரதமர் மோடி துவக்கி வைப்பார்' என்று வெளியாகியுள்ள செய்தி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்,.அந்த திட்டத்தை  பிரதமர் துவக்கி வைப்பார் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது கடைந்தெடுத்த அரசியல் மோசடி எனவும் பிரதமரை தமிழக அரசு ஏமாற்ற பார்க்கிறது என்றும்  துரைமுருகன் தெரிவித்துள்ளார்,. 


Next Story

மேலும் செய்திகள்