நிரந்தர தலைவராக கமல் தேர்வு - பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றம்

மக்கள் நீதி மய்யத்தின் நிரந்தர தலைவராக கமல்ஹாசனை தேர்வு செய்து பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது
நிரந்தர தலைவராக கமல் தேர்வு - பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றம்
x
மக்கள் நீதி மய்யத்தின் நிரந்தர தலைவராக கமல்ஹாசனை தேர்வு செய்து பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது

சென்னை வாகனகரத்தில் நடைபெற்ற மக்கள் நீதி மய்யத்தின் பொதுக்குழு கூட்டத்தில் தேர்தல், கூட்டணி தொடர்பான அனைத்து முடிவுகளை எடுக்க கமல்ஹாசனுக்கு அதிகாரம் உள்ளதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது,.

மக்கள் நீதி மய்யத்தின் நிரந்தர தலைவராக கமல்ஹாசன் செயல்படுவார் என்றும்  

தமிழக முதல்வராக கமல்ஹாசனை பொறுப்பேற்க செய்வது எனவும் தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது,. 


தமிழக அரசு வாங்கிய கடன் குறித்து, தேர்தலுக்கு முன் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் எனவும் 

ஏழு பேர் விடுதலையில் அனைத்து கட்சிகளை ஒருங்கிணைத்து மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது,. 

கிராம சபை கூட்டங்களை நடத்தாத அரசுக்கு கண்டனம் தெரிவித்தும், 

விவசாயத்தை பாதிக்கும் திட்டங்களை தமிழகத்தில் அனுமதிக்க கூடாது என்றும் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது,. 

இந்தி, சமஸ்கிருதி மொழி திணிப்பு முயற்சிக்கு கண்டனம் தெரிவித்தும் வனவிலங்கள் வாழ்விடத்தை ஆக்கிரமித்து உள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

Next Story

மேலும் செய்திகள்