வேளாண் சட்டங்கள் விவசாயிக்கு புரியவில்லை - வயநாட்டில் ராகுல் காந்தி பேச்சு

நாட்டில் விவசாயிகள் பலருக்கு, வேளாண் சட்டங்கள் பற்றி முழுமையாக தெரியவில்லை.வேளாண் சட்டம் பற்றி தெரிந்திருந்தால், நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்றிருக்கும் என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
வேளாண் சட்டங்கள் விவசாயிக்கு புரியவில்லை - வயநாட்டில் ராகுல் காந்தி பேச்சு
x
நாட்டில் விவசாயிகள் பலருக்கு, வேளாண் சட்டங்கள் பற்றி முழுமையாக தெரியவில்லை.வேளாண் சட்டம் பற்றி தெரிந்திருந்தால், நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்றிருக்கும் என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். கேரளாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி, வயநாடு பகுதிக்கு சென்றார். பின்னர் அங்கு பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய ராகுல் காந்தி, பிரதமர் மோடி தமது குறிப்பிட்ட மூன்று நான்கு நண்பர்களுக்காக இந்தியாவை வழி நடத்தி கொண்டிருப்பதாக குற்றஞ்சாட்டினார். வேளாண் சட்டம் குறித்து விவசாயிகள், நன்கு புரிந்திருந்தால், நாடே தீப்பற்றி எரிந்திருக்கும்  என்றும் அவர் குறிப்பிட்டார். 
===


Next Story

மேலும் செய்திகள்