சசிகலா உடல் நிலை சீராக, நிலையாக உள்ளது -பெங்களூரு மருத்துவமனை தகவல்

பெங்களூரு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வரும் சசிகலாவுக்கு, மூன்றாவது நாளாக கொரோனா தொற்று அறிகுறி இல்லை என தெரியவந்துள்ளது.
சசிகலா உடல் நிலை சீராக, நிலையாக உள்ளது -பெங்களூரு மருத்துவமனை தகவல்
x
பெங்களூரு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வரும் சசிகலாவுக்கு, மூன்றாவது நாளாக கொரோனா தொற்று அறிகுறி இல்லை என தெரியவந்துள்ளது. அவரது உடல் ​நிலை தொடர்பாக இன்று வெளியிட்ட மருத்துவ செய்திக் குறிப்பில் சசிகலா வாய் வழியாக உணவு உட்கொண்டு வருவதாகவும், மற்றவர்கள் உதவியுடன் நடமாடி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 66 வயதான சசிகலாவுக்கு எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையில், எந்த அறிகுறியும் இல்லை என தெரியவந்துள்ளது. மேலும் கொரோனா தொடர்பான சிகிச்சைகளுக்கு சசிகலா உரிய ஒத்துழைப்பு அளித்து வருவதாகவும், அவரை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. சசிகலாவின் நாடித்துடிப்பு, ரத்த அழுத்தம், சுவாசிக்கும் திறன்,ஆக்ஸிஜன் செறிவூட்டல் மற்றும் ரத்த சர்க்கரை அளவுகள் வழக்கமான அளவே உள்ளதாக மருத்துவ அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டு உள்ளது. இதே நிலை நீடிக்கும் நிலையில் ஒரிரு நாளில் சசிகலா சென்னை திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்