சசிகலா உடல்நிலை சீராக உள்ளது - மருத்துவமனை அறிக்கை

சசிகலா உடல்நிலை சீராக உள்ளதாகவும் கொரோனா வைரஸ் தொற்று குறைந்து வருவதாகவும், கர்நாடகாவில் உள்ள விக்டோரிய மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
x
சசிகலா உடல்நிலை சீராக உள்ளதாகவும் கொரோனா வைரஸ் தொற்று குறைந்து வருவதாகவும், கர்நாடகாவில் உள்ள விக்டோரிய மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.இது குறித்து மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,சசிகலாவின் நாடித்துடிப்பு, ரத்த அழுத்தம், சுவாசிக்கும் அளவு உள்ளிட்டவை சீராக உள்ளதாக கூறப்பட்டுள்ளது.ரத்தத்தில் சர்க்கரை அளவு 157 ஆக அதிகரித்துள்ளதால் அவருக்கு இன்சுலின் மருந்து செலுத்தப்பட்டதாகவும், விக்டோரியா மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அவருக்கு ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தாக்குதல் தொடர்ந்து குறைந்த வண்ணம் உள்ளது என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.கோவிட் - 19 சிகிச்சை வழிமுறைகள் முறையே பின்பற்றப்படுவதாகவும், நடப்பதற்கு உதவிடும்,உபகரணத்தின் மூலம் சசிகலா எழுந்து நடக்கிறார் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.தீவிர சிகிச்சை பிரிவில் தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றும் விக்டோரியா மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது.அனைத்து சிகிச்சைகளுக்கும், சசிகலா ஒத்துழைப்பு கொடுத்து வருவதாகவும், மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்