நேதாஜி வாழ்க்கை இன்றும் உத்வேகம் அளிக்கிறது - பிரதமர் மோடி

நேதாஜி சுபாஷ் சந்திர போசின் வாழ்க்கை இன்றும் ஒவ்வொருவருக்கும் உத்வேகம் அளிக்கிறது என பிரதமர் மோடி கூறினார்.
நேதாஜி வாழ்க்கை இன்றும் உத்வேகம் அளிக்கிறது -  பிரதமர் மோடி
x
நேதாஜி சுபாஷ் சந்திர போசின் வாழ்க்கை இன்றும் ஒவ்வொருவருக்கும் உத்வேகம் அளிக்கிறது என பிரதமர் மோடி கூறினார். அசாம் மாநிலம் சிவாசாகரில் நிலமில்லாத 1.06 லட்சம் பேருக்கும் நிலம் வழங்கும் சான்றிதழை பிரதமர் வழங்கினார். பின்னர் அவர் பேசுகையில், இன்று ஒட்டுமொத்த நாடும் நேதாஜியின் 125 ஆவது பிறந்த நாளை 'பராக்கிரம திவாஸ்' என்ற பெயரில் கொண்டாடுகிறது என்று மகிழ்ச்சியுடன் கூறினார். மேலும், மத்திய அரசின் அத்மானிர்பார் பாரத் திட்டத்தின் கீழ் அசாம் மாநில மக்களில் 40 சதவீத பேர் பயனடைந்துள்ளனர் எனவும் கூறியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்