ஜெயலலிதா இறப்பில் மர்மம் என்றார் ஓபிஎஸ் - திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டு

ஜெயலலிதா இறப்பில் மர்மம் உள்ளதாக கூறிய துணை முதல்வர் ஒ. பன்னீர்செல்வம், உண்மையை வெளிக்கொண்டு வரவில்லை என திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டி உள்ளார்.
x
ஜெயலலிதா இறப்பில் மர்மம் உள்ளதாக கூறிய துணை முதல்வர் ஒ. பன்னீர்செல்வம், உண்மையை வெளிக்கொண்டு வரவில்லை என திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டி உள்ளார்.தேனி மாவட்டம் அல்லிநகரத்தில் தி.மு.க. சார்பில் நடைபெற்ற மக்கள் கிராம சபை கூட்டத்தில், பெண்கள் பங்கேற்று குறைகளை கூறி கோரிக்கைகளை முன் வைத்தனர். அவர்களுக்கு பதிலளித்த ஸ்டாலின், மகளிர் சுய உதவிக் குழுவினர்களுக்கு ஒரே நாளில் 5 ஆயிரம் பேர் வரை நின்றுகொண்டே சுழல்நிதி வழங்கியதாக பெருமையாக கூறினார். விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கிய திமுக அரசு, ஆட்சிக்கு வந்தவுடன் விவசாய கடன்களை தள்ளுபடி செய்யும் என்றார். 5 சவரன் வரை வங்கியில் வைத்துள்ள நகை கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்ற அவர், மாவட்ட வாரியாக பெண்கள் நீதிமன்றம் அமைக்கப்படும் என்றார். 

Next Story

மேலும் செய்திகள்