"எம்ஜிஆர் எண்ணங்களை நிறைவேற்ற முயற்சி"- பிரதமர் மோடிபேச்சு

ஏழைகளுக்காக, தம்முடைய வாழ்வையும் அரசியலையும் அர்ப்பணித்த எம்ஜிஆரின் எண்ணத்தை நிறைவேற்ற முயற்சி மேற்கொண்டு வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
எம்ஜிஆர் எண்ணங்களை நிறைவேற்ற முயற்சி- பிரதமர் மோடிபேச்சு
x
சென்னை உட்பட நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்து குஜராத்தில் உள்ள சர்தார் வல்லபாய் பட்டேலின் ஒற்றுமை சிலையை இணைக்கும் 8 புதிய ரயில் சேவையை பிரதமர் மோடி, கொடியசைத்து துவக்கி வைத்தார். சென்னை - கெவாடியா எக்ஸ்பிரஸ் வாராந்திர ரயில் சேவையை துவக்கி வைத்து பேசிய பிரதமர் மோடி, கெவாடியா பகுதிக்கு துவங்கப்படும் 8 புதிய ரயில் சேவைகளில் எம் ஜி ஆர் மத்திய ரயில் நிலையமும் ஒன்று என குறிப்பிட்டார். இன்று எம்ஜிஆரின் பிறந்த தினம் என்றும், குறிப்பிட்ட பிரதமர் மோடி, ஏழைகளுக்காக தமது முழு வாழ்க்கையையும் அரசியலையும் அர்ப்பணித்தவர் எம்ஜிஆர் என புகழாரம் சூட்டினார். திரைப்படம் முதல் அரசியல் திரை வரை மக்களின் உள்ளத்தை ஆட்சி செய்தவர்  எம்ஜிஆர் எனவும் அவரது எண்ணத்தை நிறைவேற்ற முயற்சி மேற்கொண்டு வருவதாக பிரதமர் மோடி பெருமிதத்துடன் தெரிவித்தார்.



Next Story

மேலும் செய்திகள்