பிரதமர் மோடி அரசின் வளர்ச்சியின் முகம் இதுதானா?" - காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி கேள்வி

பிரதமர் மோடி தொழிலதிபர்களுக்கு நடப்பாண்டு தள்ளுபடி செய்த தொகையில், நாட்டில் உள்ள 11 கோடி குடும்பங்களுக்கு தலா 20 ஆயிரம் ரூபாய் வழங்கி இருக்க முடியும் என ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி அரசின் வளர்ச்சியின் முகம் இதுதானா? - காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி கேள்வி
x
பிரதமர் மோடி தொழிலதிபர்களுக்கு நடப்பாண்டு தள்ளுபடி செய்த தொகையில்,  நாட்டில் உள்ள 11 கோடி குடும்பங்களுக்கு தலா 20 ஆயிரம் ரூபாய் வழங்கி இருக்க முடியும் என ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ராகுல்காந்தி தமது பதிவில், நடப்பாண்டு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க. அரசு , தொழிலதிபர்களுக்கு  2 லட்சத்து 37 ஆயிர​த்து 876 கோடி ரூபாயை தள்ளுபடி செய்து உள்ளதாக தெரிவித்துள்ளார்.  கொரோனா காலக் கட்டத்தில் நாட்டிலுள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 20 ஆயிரம் ரூபாயை, இந்த தொகையில் இருந்து வழங்கியிருக்க முடியும் எனவும் ராகுல்காந்தி சுட்டிக்காட்டி உள்ளார். ஆனால், தொழில் அதிபர்களுக்கு தள்ளுபடி செ​ய்வது தான் மோடி அரசின் வளர்ச்சியா என்றும் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்