"பாஜக ஆட்சியில் மணிப்பூர் அமைதிப்பூங்காவாக திகழ்கிறது" - உள்துறை அமைச்சர் அமித்ஷா கருத்து

கடந்த காலங்களில் பிரிவினைவாதிகளின் தூண்டுதல்களால் வன்முறை காடாக இருந்த மணிப்பூர், பாஜக ஆட்சியில் அமைதிப்பூங்காவாக திகழ்வதாக, உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.
பாஜக ஆட்சியில் மணிப்பூர் அமைதிப்பூங்காவாக திகழ்கிறது - உள்துறை அமைச்சர் அமித்ஷா கருத்து
x
தலைநகர் இம்பாலில் நடைபெற்ற பல அரசு நலத்திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டினார். அப்போது விழாவில் பேசிய அமைச்சர், வடகிழக்கு மாநில வளர்ச்சிக்கு பிரதமர் மோடி தனி கவனம் செலுத்தி வளர்ச்சிப்பாதைக்கு வித்திட்டதாக கூறினார். கடந்த 6 ஆண்டுகளாக அமைதி இன்றி இருந்த மணிப்பூர், முதலமைச்சர் முதலமைச்சர் பீரேன் சிங் தலைமையில் கடந்த 3 ஆண்டுகளாக வளர்ச்சிப்பாதையில் செல்வதாக கூறியுள்ளார். காங்கிரஸ் ஆட்சி காலத்தில் வடகிழக்கு மாநிலங்களில் வன்முறை நடந்தேறியதாகவும், ஆனால் பாஜக பிரிவினைவாதிகளோடு பேசி பிரச்சனையை தீர்த்து அமைதிக்கு வழிகண்டதாகவும் அமித்ஷா கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்