சபரிமலை வரும் அய்யப்ப பக்தர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த கொரோனா கட்டுப்பாடு மாற்றி அமைப்பு - கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் உத்தரவு

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த கொரோனா கட்டுப்பாடுகளை கேரள அரசு மாற்றி அமைத்துள்ளது.
சபரிமலை வரும் அய்யப்ப பக்தர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த கொரோனா கட்டுப்பாடு மாற்றி அமைப்பு - கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் உத்தரவு
x
சபரிமலையில் மகரவிளக்கு மற்றும் மண்டல பூஜைக்காக வரும் 15ஆம் தேதி நடை திறக்கப்பட உள்ளது. இதற்கு அடுத்த நாள் முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ள நிலையில், முன்பதிவு செய்த பக்தர்கள், சபரிமலை வருவதற்கு 24 மணி நேரத்திற்கு முன்னதாக எடுக்கப்பட்ட கொரோனா நெகட்டிவ் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என கேரள அரசு உத்தரவிட்டு உள்ளது. 48 மணி நேரத்திற்கு முன்பாக சோதனை எடுத்த சான்றிதழ் வழங்க வேண்டும் என கூறியிருந்த நிலையில், தற்போது 24 மணி நேரமாக குறைக்கப்பட்டு உள்ளது . பக்தர்களுடன் துணைக்கு வருவோரும், ஓட்டுநர்களுக்கும் கொரோனா நெகட்டிவ் சான்று வைத்திருப்பது கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சானிடைசர், முக கவசங்களை பக்தர்கள் வைத்திருக்க வேண்டும் எனவும், தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டால், அங்கேயே தங்கி சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாகவும் அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. பக்தர்கள் விருப்பப்பட்டால், சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கவும் ஏற்பாடு செய்யப்படும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்