குஜராத்தில் சர்தார் பட்டேல் உயிரியல் பூங்கா - பிரதமர் மோடி திறந்துவைத்து பார்வையிட்டார்
குஜராத்தில் சர்தார் பட்டேல் உயிரியல் பூங்காவை பிரதமர் மோடி திறந்துவைத்து பார்வையிட்டார்.
பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில், சர்தார் சரோவர் அணை அருகே, உலகின் உயரமான வல்லபாய் படேல் சிலை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த சிலை அருகே உலகத்தரம் வாய்ந்த உயிரியல் பூங்காவை குஜராத் மாநில அரசு அமைத்துள்ளது. 1,300 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள இந்த உயிரியல் பூங்காவில் 12 வகை மான்கள், ஒட்டகச்சிவிங்கிகள், வரிக்குதிரைகள், காண்டா மிருகங்கள், காட்டெருமைகள் உள்ளிட்ட அரிய வகை விலங்குகள் உள்ளன. ஜங்கிள் சபாரி என்றழைக்கப்பட்டும் சர்தார் பட்டேல் உயிரியல் பூங்காவை திறந்துவைத்த பிரதமர் மோடி, அங்குள்ள பறவைகள், விலங்குகளை பார்வையிட்டார்.
Next Story