பல்வேறு மாவட்ட ரசிகர்களை சந்தித்த நடிகர் விஜய் - தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து ரசிகர்களிடம் பேசியதாக தகவல்

சென்னையில் உள்ள தனது இல்லத்தில் நடிகர் விஜய் ரசிகர்களுடன் ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
பல்வேறு மாவட்ட ரசிகர்களை சந்தித்த நடிகர் விஜய் - தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து ரசிகர்களிடம் பேசியதாக தகவல்
x
தமிழக்ததில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கும் நிலையில் பல்வேறு கட்சியினரும், தீவிர அரசியல் நடவடிக்கைகளை இறங்கியுள்ளனர். இந்நிலையில் நடிகர் விஜய் தமது மக்கள் இயக்கத்தை சேர்ந்த ரசிகர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். நேற்று, பனையூரில், மதுரை, திருச்சி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில், புதிதாக பொறுப்பேற்ற  ரசிகர்களை நடிகர் விஜய் சந்தித்து பேசியுள்ளார்.  அப்போது, நடிகர் விஜய் அரசியலுக்கு வர ரசிகர்கள் அழைப்பு விடுத்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அப்போது நடிகர் விஜய், தற்போதைய அரசியல் நிலரவம் குறித்து, அந்தந்த மாவட்டங்களில் நிலவி வரும் சூழல் குறித்தும் கேட்டு அறிந்ததாக கூறப்படுகிறது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு, இயக்குநர் எஸ், ஏ. சந்திரசேகர், தேவைப்பட்டால், விஜய் மக்கள் இயக்கம் அரசியலில் களம் காணும் என்று கூறியிருந்தார் . இதனைத் தொடர்ந்து நடிகர் விஜய், தனது ரசிகர் மன்ற மாவட்ட நிர்வாகிகளிடம் ஆலோசனை  நடத்திக் கொண்டிருப்பது அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்