"என் நெஞ்சை பிளந்தால் அங்கே பிரதமர் மோடி இருப்பார்" - ராம் விலாஸ் பஸ்வான் மகன், சிராக் பஸ்வான் கருத்து

பீகார் மாநில சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரத்தின் போது பிரதமர் மோடியின் புகைப்படத்தை லோக் ஜன சக்தி கட்சி பயன்படுத்தக்கூடாது என அக்கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
என் நெஞ்சை பிளந்தால் அங்கே பிரதமர் மோடி இருப்பார் - ராம் விலாஸ் பஸ்வான் மகன், சிராக் பஸ்வான் கருத்து
x
பீகார் மாநில சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரத்தின் போது பிரதமர் மோடியின் புகைப்படத்தை லோக் ஜன சக்தி கட்சி பயன்படுத்தக்கூடாது என அக்கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சிராக் பாஸ்வான், பிரதமர் மோடியின் புகைப்படம் எதுவும் தேவையில்லை எனவும் அவர் தன்னுடைய இதயத்தில் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
கடவுளின் அவதாரமான ராமபிரான் மீது ஹனுமன் வைத்திருந்த பக்தியை போல தன்னுடைய நெஞ்சைப் பிளந்து பார்த்தால் அங்கே பிரதமர் மோடி மட்டுமே இருப்பார் என அவர் குறிப்பிட்டுள்ளார். 
தங்களுக்குள் இருக்கும் சொந்தப் பிரச்சனை காரணமாக அடிப்படை தன்மையை கூட நிதிஷ்குமார், மறந்து விட்டார் என்பது தமக்கு அதிர்ச்சி அளிப்பதாகவும் சிராக் பாஸ்வான் குற்றம் சாட்டியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்